பக்கம் எண் :

தமிழ் முழக்கம்179

10. விண் குடும்பம்

கலிவெண்பா

உப்புமுதல் எல்லா உணவுப் பொருள்விலைகள்
செப்பரிய ஏற்றத்தாற் செய்வ தறியாமல்
மண்ணிற் குடும்பம் மதிமயங்கி நிற்குங்கால்
விண்ணிற் குடும்பம் விரும்பிப் படைப்பதற்கு
முன்வந்தார் இவ்வரங்கில் முத்தமிழில் வல்லவர்தாம்;
என்சொல்லி வாழ்த்துவேன் இந்தத் துணிவுளத்தை!
பேராசைக் காரர்களின் பேயாட்டப் போர்முகில்கள்
தீராமற் சூழ்ந்து திகைக்கும் படியாக
மின்வெட்டும் போழ்தத்து மேவாச் செயல்செய்து,
கண்கட்டு வித்தையெனக் கள்ளத் தனம்புரிந்து.10
பண்டங்கள் யாவும் பதுக்கி மறைக்கின்ற
முண்டங்கள், தாங்க முடியா விலைச்சுமையை
நந்தலையில் ஏற்றுகின்றார்; நாடோறும் ஏற்றுவதால்
வெந்துழன்று நொந்துமனம் வில்லாய் வளைகின்றோம்;
வில்லாய் வளைந்தவர் வீறுற் றெழுவாரேல்
சொல்லால் அதன்விளைவைச் சொல்ல முடிந்திடுமோ?
தாழ்ந்து நிமிர்கின்ற வில்லின் நுனிபட்டுப்
போழ்ந்துமுகம் செங்குருதி பொங்கி வழியாதோ?
பற்றாக் குறையினைப் பாவியிவர் காசுபணப்
பற்றால் விளைக்கின்றார்; பாரகத்தில் பஞ்சமெனும்20