182 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
எண்ணில்லாப் பிள்ளைகளை ஈன்றனரோ? அம்மக்கள் விண்ணிற் றிரிந்து விளையாடுங் காட்சியைத்தான் மண்ணகத்து மாந்தர் உடுவென்று மாற்றினரோ? கண்பட்டு விட்டதென்பார் காதுக்குட் சொல்கின்றேன்;80 எத்துணைதான் இன்பம் இழைந்திழைந்து வாழ்ந்தாலும் ஒத்தமனங் கொண்டிங் குயர்வுடனே வாழ்ந்தாலும் ஒன்றிரண்டு பூசல் உறுவ தியல்பாகும்; கன்றிமனங் காய்ந்து கழறுவதும் அவ்வியல்பே; வாழுங் குடும்ப வழக்குக்கு வானத்துச் சூழுங் குடும்பமும் சொல்லுங்கால் தப்பாது; வானக் குடும்பத்தில் வாய்த்ததொரு பூசலினால் தானந்தக் கூக்குரலோ? தையல் பெருங்குரலோ? செங்கதிரோன் றன்குரலோ? செவ்விதிற் கேட்கவிலை; பொங்கும் இடியென்று பூசி மெழுகுகின்றார்;90 வீட்டில் நடப்பதெலாம் வேற்றார் தெரியாமல் பூட்டி மறைப்பதுதான் போற்றுங் குடும்பமென்பர்; வாழ்ந்து வருநாளில் வான்மகள்தன் மெய்யொளியிற் றாழ்ந்து மெலிந்து தளர்ந்து நடைபயின்றாள்; கண்பட்டுப் போகக் கணக்கில் மகப்பெற்றாள் புண்பட்டாள் துன்புற்றாள் பொன்மேனி வாடிவர நோயிற் பிணிப்புண்டாள், நுண்ணிடைபோல் தேய்ந்தழகுச் சாயல் இழந்திழந்து சாய்ந்தே மறைந்துவிட்டாள்; காதற் கணவன் கதிரோன் மனமுடைந்து, ‘சாதல் உறுமகளே சாய்வதற்கோ தேய்ந்தனைநீ?100 நீளுலகில் என்றும் நிலைத்துநிலாப் பெண்மணியே பாழுலகோர் நெஞ்சிற் பரிவுடனே நின்னை நிலவுநில வென்றுரைப்பர்; நீயென்ன செய்வாய்! நிலையாமை காட்டினைநீ; நெஞ்சத்துப் புக்கவளே, |