நாளை பிறப்பாயோ? நான்மகிழ வாராயோ? தோளைப் புணர்ந்தின்பச் சொல்லமுது தாராயோ?’ என்றெல்லா மேங்கி இரங்கிப் புலம்பிக்கண் கன்றும் படியாகக் கண்ணீர் சொரிந்திருந்தான்; விண்ணிற் கதிரோன் விடுத்தகண் ணீரினைத்தான் மண்ணில் இருப்போர் மழையென்று கொண்டனரோ?110 இன்பமுடன் துன்பம் இணைந்ததுதான் வாழ்க்கைஎன மன்பதையோர் எண்ணி மனங்கொண்டு வாழ்வாரேல் நல்ல குடும்பம் நடத்தி மகிழ்ந்திடலாம் அல்லல் சிறிதுமிலை யாம். தமிழ் இலக்கியப் பெருமன்றம் இராசிபுரம் 25.9.1966 |