பக்கம் எண் :

214கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

பொதுவுடைமைச் செம்புலத்துப் பெய்யும் போது
    புத்துலகச் செம்மைநிறம் பொருந்தி நிற்கும்;
மதியுடைமைக் கார்நிலத்திற் கொட்டுங் காலை
    மலர்ந்திருக்குங் கருவண்ணம்; கருமை செம்மை
பொதுளியநற் பூமிதனில் பொழியும் போது
    பூத்திருக்கும் இருவண்ணம்; மதத்திற் பெய்தால்
அதனுடைய வண்ணமுமாய்க் காட்சி நல்கும்;
    அமரகவி பெய்ததமிழ் மழைநீ ரெல்லாம்.7

பழங்குப்பை கூளமெலாம் அடித்துச் செல்லும்;
பகுத்தறிவுப் புலத்தையது குளிரச் செய்யும்;
    வளங்கெட்ட வறுமையுடன் செல்வ மென்று
வருமேடு பள்ளமெலாம் சமப்ப டுத்தும்;
    விளங்குற்ற அறிவுவளம், உரிமை வேட்கை,
வீரமிக்க துணிவுள்ளம், இன்னோ ரன்ன
    களங்கமறு நறுமலர்கள் மலரச் செய்யும்
கவிஞனவன் பெய்ததமிழ் மழைநீ ரெல்லாம்.8

எங்கள்சுதந் திரதாகம் தணிவ தெந்நாள்?
    என்றேங்கும் பொழுதத்துத் தாகம் தீர்க்கச்
சிங்கமகன் கோடைமழை யாக வந்தான்;
    செந்தமிழர் திருநாட்டைப் பாடும் போது
பொங்கிவருங் காலமழை யாகி நின்றான்;
    புதுமுறையில் பாஞ்சாலி சபதம் பாடிப்
பங்கமறப் பொதுநெறியில் தெய்வப் பாடற்
    பண்பாடி அடைமழையாய்ப் பொழிந்து நின்றான்.9

பாரதிபெய் தமிழ்மழையால் சாவா தின்னும்
    பாட்டுலகம் வழங்கிவரும் கார ணத்தால்
*வாரமிகும் அம்மழையை அமிழ்தம் என்றே
    வாய்மணக்கச் சொல்லிடலாம்; பாடல் என்னும்