224 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3 |
அண்ணல் நடந்த அடிச்சுவட்டைக் காணவில்லை மண்ணெடுத்துத் தூவி மறைத்து நடக்கின்றோம்; எத்தனையோ கல்தூரம் ஏந்தல் நடந்துவந்தார்; அத்தனையும் அச்சுவடு தோன்றா தழித்துவிட்டோம்; அன்னவர்க்கு மண்டபங்கள் அங்கங்கே கட்டிவைத்தோம் சொன்னவற்றை மட்டும் தொலைவில் கட்டிவைத்தோம்;170 நல்லோன் எடுத்துரைத்த நல்ல கருத்தெல்லாம் உள்ளே நுழையாமல் உள்ளத்தைப் பூட்டிவிட்டோம்; தந்தைக்கு நாம்செய்யும் தக்கதொரு கைம்மாறா? சிந்தைக்கும் சொல்லுக்கும் செய்யும் செயலுக்கும் தூய்மை கொடுத்துத் தொடர்பு படுத்திஅதை வாய்மை எனஎண்ணி வாழ முயன்றோமா? ஆர்ப்பரிப்பும் பூசனையும் அண்ணல் விழைவதில்லை ஏற்புடைய வாய்மையே என்றும் உகந்திருந்தார்; அண்ணல் நடந்த அடிச்சுவட்டைப் பார்த்ததன்மேல் எண்ணி நடப்போம் இனி.180 காந்தி நூற்றாண்டு விழா அரூர் சேலம் மாவட்டம் |