பக்கம் எண் :

224கவியரசர் முடியரசன் படைப்புகள் - 3

அண்ணல் நடந்த அடிச்சுவட்டைக் காணவில்லை
மண்ணெடுத்துத் தூவி மறைத்து நடக்கின்றோம்;
எத்தனையோ கல்தூரம் ஏந்தல் நடந்துவந்தார்;
அத்தனையும் அச்சுவடு தோன்றா தழித்துவிட்டோம்;
அன்னவர்க்கு மண்டபங்கள் அங்கங்கே கட்டிவைத்தோம்
சொன்னவற்றை மட்டும் தொலைவில் கட்டிவைத்தோம்;170
நல்லோன் எடுத்துரைத்த நல்ல கருத்தெல்லாம்
உள்ளே நுழையாமல் உள்ளத்தைப் பூட்டிவிட்டோம்;
தந்தைக்கு நாம்செய்யும் தக்கதொரு கைம்மாறா?
சிந்தைக்கும் சொல்லுக்கும் செய்யும் செயலுக்கும்
தூய்மை கொடுத்துத் தொடர்பு படுத்திஅதை
வாய்மை எனஎண்ணி வாழ முயன்றோமா?
ஆர்ப்பரிப்பும் பூசனையும் அண்ணல் விழைவதில்லை
ஏற்புடைய வாய்மையே என்றும் உகந்திருந்தார்;
அண்ணல் நடந்த அடிச்சுவட்டைப் பார்த்ததன்மேல்
எண்ணி நடப்போம் இனி.180

காந்தி நூற்றாண்டு விழா
அரூர்
சேலம் மாவட்டம்