1 நந்தா விளக்கே! நிலைமண்டில ஆசிரியப்பா செந்தமிழ் மொழியே சீர்சால் விளக்கே! முந்திய மொழியே முழுமையின் ஒளியே! கற்றோர் நெஞ்சங் களிக்கும் வகையில் ஞான ஒளியினை நல்கிடும் விளக்கே! வறுமையும் இடரும் *வட்கார் பகையும் உறுமிடி புயலென உருத்தெழு நிலையிலும் என்னுள் நின்றொளி எழிலுற விளங்கிட நண்ணும் என்னுயிர் நத்தா விளக்கே ஆய்தொறும் ஆய்தொறும் அரும்பொருள் நல்கலில் ஓய்தல் இல்லா உயர்கொடை விளக்கே! பலபல மொழிகள் பரந்திவண் தோன்றினும் உலகில் நிகரிலா தோங்குவான் விளக்கே! நையும் நிலையிலும் நான்களி கொள்ள உய்யும் வழிதரும் பொய்யா விளக்கே! காற்றும் மழையுங் கடுகிய போதும் ஏற்றிய உனக்கோர் இடையூ றின்றிப் போற்றுதல் கடனெனப் பூண்டுளேன் நோன்பு; தணியா உழைப்புந், தக்கோர் உறவும்,
*வட்கார் - பகைவர் |