பக்கம் எண் :

104கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

துணிவுடன் என்னுள் தோன்றுநல் லார்வமும்
முப்புரித் திரியென மொய்ம்புடன் ஏற்றி
எப்பொழு தும்நினை ஏத்துதல் உடையேன்;
உணர்வெனும் நெய்யில் ஊறிய யாப்பில்
புணரணி ஏற்றிப் பொருள்தெரி வகையால்
உலகம் அனைத்துநின் ஒளியினைப் பரப்பக்
குலவும் நினைவே கொண்டுளேன் அதனால்
செய்யும் பணிகள் செல்விதன் இலங்கிடக்
கைகுவித் தேத்தினேன் காத்தருள் தாயே!