பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்191

இடருறல் கண்டேம் *இனைந்ததெம் மனனே;
விளக்கொன் றிருந்தும் விளங்கா மாந்தர்
கிணற்றில் வீழும் கெடுநிலை யுற்றார்;
காலைக் கதிரவன் தோன்றிய பிறகும்
நீளத் துயிலுதல் நெறியோ? முறையோ?
அறியாப் பேரிருள் அகற்றிட எழுந்தான்
நெறியால் முறையால் நீள்கதிர்ச் செல்வன்;
எழுக எழுக என்றினிப் பாடுதும்
தொழுக தொழுக சுடரெனப் பாடுதும்;
தூண்டும் விளக்கெனத் துலங்கிடும்; மணிகாள்
வேண்டும் வேண்டும் விழிப்பினி வேண்டும்
நும்பா லமைந்துள நுண்ணறி வொளியைக்
கண்போற் காக்கக் கருதும்=நும் ஆசான்
தூண்டத் தூண்டத் துலங்கிடும்; ஆதலின்
தூண்டும் விளக்கெனச் சொல்லினம் நும்மை;
அத்தகு விளக்கினை அனுகிய யாமும்
ஒத்தநன் முறையால் தூண்டுதல் உரியேம்;
அயன்மொழிப் பற்றெனும் ஆரிருள் நீங்கிட
உயர்மொழி தாய்மொழி ஒன்றே விளங்கிட
அணையா விளக்கென ஆக்குதல் எங்கடன்
துணையாய் வருகெனத் தூண்டுதும் யாமே;
எம்மொழி யாயினும் அம்மொழிக் கடிமை
செய்ம்முறை வேண்டேல், செந்தமிழ் வேண்டி
எழுக எழுக என்றுமைத் தூண்டித்
தொழுக தொழுக சுடரென
மொழிவதே எங்கடன் முயலல்நும் கடனே..

அழகப்பர் கலைக்கல்லூரி - காரைக்குடி


*இனைந்தது - வருந்தியது.

மனிதரைக் கண்டு கொண்டேன்