190 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
றாடிய காலுடன் ஒடிட முயல்வான் ஒடிட முடியா துடலெலாம் வியர்ப்பான்; உயிர்ப்பும் அடங்கி ஒடுங்கிய தோவென அயிர்க்கும் வகையி லமைந்து கிடப்பான்; வழியிடை மேவும் குழியும் மேடும் தெளிவுற அறியாது திணறுவன் கலங்கி; ஏறியும் இறங்கியும் இடறியும் நெறிதடு மாறியும் மயங்கியும் மனத்துய ரெய்தி, அழிது ருற்றே அலமந் தேகுவன், விழியொளி பெறாற்கு விளைவன இவையாம். மதியொளி பெறானும் மடமையிற் சென்று கதியொன் றறியாது கலங்குவன் இவ்வணம்; எதிர்நாள் வருவதை இன்னதென் றுணரான்; ஒன்றைமற் றொன்றாப் பிறழ்ந்திட வுணர்ந்து பொன்றுவன்; ஒன்றும் புரியா தொழுகுவன்; தீதும் நன்றுந் தெரியா திறங்கி வேதனைக் குழியில் வீழ்ந்து மயங்குவன்; ஆதலின் வாழ்வில் ஆய்ந்து நன்னெறி ஈதென வுணர்ந்தே இன்ப மெய்திட, நல்லன தீயன நாடி யறிந்து செல்வழி நோக்கிச் சென்றிட உய்ந்திட அறிவெனும் விளக்கினை அடைந்திடல் வேண்டும்; உலக மாந்தர் நிலையினை நோக்கின் விலகிய நெறியே விழைவது கண்டோம்; அன்பும் பண்பும் ஆர்ந்துநம் மாந்தர் இன்பவாழ்வின் இலங்கிட விழைந்தோம்; அவர்தம் துன்ப வாழ்வே துணையெனக் கொண்டு தொடர்வது கண்டு துவண்டதெம் முளமே; |