பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்189

நண்ணும் முழுமை நலியும் தேயும்;
*உண்மதி யென்னும் ஒளிவிளக் கிதன்பால்
நண்ணும் முழுமை நலிதலும் இல்லை
தேய்தலும் மாய்தலும் சிறிதும் இல்லை;
வாழும் நாளில் வழிவழி சிறந்து
நாளும் வளரும் நந்தா விளக்கு;
தெய்விளக் காயினும் எவ்விளக் காயினும்
பெய்ம்மழை தன்னால் பெருவளி மின்னால்
குறைந்தும் அணைந்தும் மறைந்திங் கொழிவன;
அகல்விளக் காயினும் அகல்விளக் காகும்;
பெரும்புய லாயினும் பேரிடி யாயினும்
வரும்பொழு திங்கே உறுதுய ரில்லா
அணையா விளக்கே அறிவெனும் விளக்கு
குறையா விளக்கே குலவுமெய் விளக்கு
நினைத்தெழும் அறிவெனும் நேரிய விளக்கே
அனைத்துல கெங்கும் அகல்விளக் காகும்;
பொய்விளக் காகிய புறவிளக் கதனினும்
மெய்விளக் காகிய அகவிளக் கொன்றே
தலைவிளக் காகும்;தக்கோர் விழையும்
நிலைவிளக் காகும் நினைவினிற் கொள்க;
கைவிளக் கில்லான் காரிருள் நெறியிற்
செய்வதொன் றறியான், செல்வழி தெரியான்
எதிர்வரும் உருவினை இன்னதென் றுணரான்,
மிதிபடுங் கயிற்றினை மேவிய அரவெனக்
குதிபடத் தாவிக் கோவென் றலறுவான்,
எஞ்சிய சிறுமரம் எதிரிற் றோன்றிடின்
அஞ்சியும் நடுங்கியும் ஐயஒ பேயென்


* உண்மதி - அறிவு