பக்கம் எண் :

188கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

புடைபடு புறத்துப் பொருள்களை மறைத்து,
நேர்படக் காணா நிலையினைத் தந்து
சீர்கெடச் செய்யும்; செய்திடுங் காலை
இருளினை ஓட்டிப் பொருளினை விளக்கி
இருவிழி களிக்க வருமொளி ஒன்று;
மட்புலன் விளக்கி மயக்கந் தவிர்க்குங்
கட்புலன் காணுங் கதிர்விளக் கஃதாம்;
அகமெனு முலகில் அறியாப் பேரிருள்
புகுதலின் நல்லன புரியா தொளித்து,
நேர்படக் காணா நிலையினைத் தந்து
சீர்கெடச் செய்யும்; செய்திடுங் காலை
மருளினை ஓட்டி மாண்பினை விளக்கித்
திருவுளங் களிக்க வருமொளி ஒன்றாம்:
வருமொளி அதுதான் வளரறி வாகும்
உட்புலன் விளக்கி உள்ளிடர் தவிர்க்கும்
மெய்ப்புல மாகிய விளக்கிஃ தாகும்;
புறவிளக் கெனவும் அகவிளக் கெனவும்
இருவகைத் தாகும் இயம்பிய விளக்கு;
விண்ணில் தோன்றி விழிக்கொளி நல்கி
மண்ணிற் படுபொருள் கண்ணிற் படும்வணம்
அரைநாள் விளக்கி வரையறை செய்யும்
குறையுடைத் தாகும் கூர்கதிர் விளக்கே;
அகத்தினில் தோன்றும் அறிவெனும் விளக்கோ
மனத்தொளி நல்கும் மாண்பொருள் விளக்கும்;
வரையறை யின்றி வாழ்நாள் எல்லாம்
புரையற ஒளியினைப் போற்றி நல்கிடும்;
*தண்மதி யென்னும் ஒண்கதிர் விளக்கும்


* தண்மதி - குளிர்நிலா