பக்கம் எண் :

மனிதனைத் தேடுகிறேன்187

32
அணையா விளக்கு

நேரிசை ஆசிரியப்பா

கொடையே வாழ்வின் குறிக்கோ ளாக
உடையோன் அழகன் ஒருதனிச் செம்மல்
திரைகட லோடித் தேடிய செல்வம்
குறைவற வார்க்கும் நறுநெய் யாகக்
கலைத்திறன் முற்றக் கைவலா ரியற்றிய
நிலைத்தநற் கூடம் நெடியதோர் *தகழியா
ஏற்றிய விளக்கின் இலங்கொளி பெற்றுத்
தோற்றிய அறிவால் துலங்கிடும் மணிகாள்,
விளக்கெனும் ஒருசொல் விளக்கிடும் பொருளை
உளத்தினிற் புலப்படத் தெரிந்திடல் நன்றாம்;
இருளெனும் ஒருபகை எங்கும் பரந்து
பொருள்தெரி யாவணம் புதைத்ததை மறைத்திடும்!
தெரியாப் பொருளைத் தெள்ளிதின் நமக்குத்
தெரியச் செய்வது செவ்விய ஒளியே;
விளங்காப் பொருளை விளக்கிய ஒளியை
விளக்கென முன்னோர் விளம்பினர்; அதுதான்
உள்ளும் புறமும் ஒளிசெய் வகையால்
கொள்ளும் இருவகைக் கூறெனக் கூறுவர்;
கடல்வளை உலகிற் காரிருள் சூழ்ந்து,


*தகழி - அகல் விளக்கு