186 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
என்னோற்றோம் இதுகாண? தாழ்ந்த கூந்தல் எப்படியோ உயர்ந்ததம்மா; கொண்டை என்று பன்னூற்று வகைகளிலே பாழ்ப டுத்திப் பாவையரே அழகெல்லாஞ் சிரிக்கச் செய்தீர்! கானத்தும் குகையிடத்தும் வாழ்ந்த நாளைக் காட்டுகிறார் முன்னேறிச் செல்லும் நல்லார்; மானத்தைக் காக்கின்ற ஆடை தன்னில் மதியுடையார் சிக்கனத்தை விழையார் அம்மா; மேனிக்கும் மனத்துக்கும் மென்மை வேண்டும் மேலாடை ஒன்றுக்கும் மென்மை வேண்டா! மானுக்கு நிகராக வாழ்தல் ஒன்றே மாதர்க்கு நற்பெருமை யாகும் அம்மா! திரு.வி.க. நினைவு நாள் - தஞ்சை 9.1.1966 |