198 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
1 என்றும் வாழ்வர் அள்ளிக் கொடுத்தவர் சாவதில்லை அன்பு மனத்தவர் மாய்வதில்லை - அள்ளிக் உள்ளம் மிகுத்தவர் வீழ்வதில்லை ஓங்கு பெரும்புகழ் சாய்வதில்லை - அள்ளிக் முல்லைக் கொடிக்கொரு தேர்கொடுத்தான் - பாரி முத்தமிழ் வாணர்க்கோ ஊர்கொடுத்தான் - அள்ளிக் சொல்லுந் தமிழ்க்குயர் வாழ்வளிக்கக் குமணன் தூய தலைகொள வாள்கொடுத்தான் - அள்ளிக் நெல்லிக் கனிக்கொரு பேரளித்தான் அதியன் நீள்புகழ் அவ்வைக்கு வாழ்வளித்தான் - அள்ளிக் கல்விப் பணிக்கெனச் சீர்கொடுத்தான் - அழகன் கைப்பொருள் யாவையு மேகொடுத்தான் - அள்ளிக் வள்ளல்க ளாமென வாழ்பவரை மாய்ந்தனர் என்றிங்கு யாருரைத்தார்? உள்ளம் இருப்பவர் யாவருமே உலக வரைப்பினில் வாழ்ந்திடுவார். |