பக்கம் எண் :

214கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

புலர்காலை எழுகதிரோன் உலகுக் கெல்லாம்
      பொதுவெனல்போல் வெவ்வேறு சமய மாந்தர்
பலர்சேர்ந்து வாழ்த்துகின்றார்; சமய மில்லேன்
      பாமாலை கொண்டுன்னை வாழ்த்து கின்றேன்.

பல்வேறு சமயத்தார், சமயம் இல்லார்,
      பன்மொழிகள் கற்றுணர்ந்தார், ஒன்று கற்றார்,
பல்வேறு கட்சியினர், கட்சி சாரார்,
      பலபிளவுச் சாதியினர், சாதி வேண்டார்,
எல்லாரும் ஒன்றாகிப் போற்று கின்றார்;
      இன்றமிழால் ஒன்றுபடும் காட்சி கண்டேன்;
நல்லோர்தாம் பன்மையினாற் சிதறுண் ணாமல்
      நலமிக்க ஒருமையினால் தமிழைக் காப்பர்.

குடியரசு நின்போலும் சான்றோர் தம்மைக்
      கொண்டாடி விருதளிக்க மறந்த தேனும்
முடியரசன் நின்பெருமை பாடு கின்றேன்
      மூவேந்தர் மரபறிந்து வாழ்த்து கின்றேன்;
மடியின்றிச் சுறுசுறுப்பால் தமிழைத் தேடும்
      மாண்பால்அஞ் சிறைத்தும்பி என்று நின்னைப்
படிஅழைக்க விருதளித்தேன்; என்பாற் செல்வம்
      பாடலொன்றே அதையளித்தேன் பரிசி லாக.

தாய்மொழியைப் பாராட்ட விழையும் மாந்தர்
      தம்மொழியிற் சான்றோரைப் போற்றல் வேண்டும்
தாய்நாட்டு முதலமைச்சர் மாலை சூட்டத்
      தகுகல்விப் பொறுப்பேற்ற அமைச்சர் நின்று


* சேய் நாட்டார் - தூர நாட்டவர்.