214 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
புலர்காலை எழுகதிரோன் உலகுக் கெல்லாம் பொதுவெனல்போல் வெவ்வேறு சமய மாந்தர் பலர்சேர்ந்து வாழ்த்துகின்றார்; சமய மில்லேன் பாமாலை கொண்டுன்னை வாழ்த்து கின்றேன். பல்வேறு சமயத்தார், சமயம் இல்லார், பன்மொழிகள் கற்றுணர்ந்தார், ஒன்று கற்றார், பல்வேறு கட்சியினர், கட்சி சாரார், பலபிளவுச் சாதியினர், சாதி வேண்டார், எல்லாரும் ஒன்றாகிப் போற்று கின்றார்; இன்றமிழால் ஒன்றுபடும் காட்சி கண்டேன்; நல்லோர்தாம் பன்மையினாற் சிதறுண் ணாமல் நலமிக்க ஒருமையினால் தமிழைக் காப்பர். குடியரசு நின்போலும் சான்றோர் தம்மைக் கொண்டாடி விருதளிக்க மறந்த தேனும் முடியரசன் நின்பெருமை பாடு கின்றேன் மூவேந்தர் மரபறிந்து வாழ்த்து கின்றேன்; மடியின்றிச் சுறுசுறுப்பால் தமிழைத் தேடும் மாண்பால்அஞ் சிறைத்தும்பி என்று நின்னைப் படிஅழைக்க விருதளித்தேன்; என்பாற் செல்வம் பாடலொன்றே அதையளித்தேன் பரிசி லாக. தாய்மொழியைப் பாராட்ட விழையும் மாந்தர் தம்மொழியிற் சான்றோரைப் போற்றல் வேண்டும் தாய்நாட்டு முதலமைச்சர் மாலை சூட்டத் தகுகல்விப் பொறுப்பேற்ற அமைச்சர் நின்று
* சேய் நாட்டார் - தூர நாட்டவர். |