பக்கம் எண் :

262கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

30
என்றும் உயர்க எழில் முல்லை

முல்லைச் சரத்துக்கு வெள்ளி விழாவென்னும்
சொல்லைச் செவிமடுத்தேன் சொக்கிநின்றேன் - புல்லிதழை
வேட்டலையும் கூட்டத்துள் வெள்ளிவிழா நாள்வரையில்
நாட்டியவன் யாரென்றேன் நான்.

முல்லைச் சரந்தொடுப்பான் முத்தமிழ்க்குத் தீங்குவரின்
சொல்லிற் சரந்தொடுப்பான் தூயனவன் - நல்லநல்ல
பாட்டுந் தொடுத்திருப்பான் பாவேந்தின் பொன்னடியான்
நாட்டினன்காண் என்றார் நயந்து.

பொன்னடியான் வாழ்கஎனப் பூரிப்பால் நான்மொழிந்தேன்
பின்னடையான் ஆள்வினையைப் பேணிநின்றேன் - நன்னடையான்
என்றும்உயர்க எழில்முல்லைச் சரமென்றேன்
ஒன்றும் உணர்வ்hல் உவந்து.

(வெள்ளிவிழாக் கண்ட ‘முல்லைச்சரம்’ இதழுக்கு வாழ்த்து)