பக்கம் எண் :

8கவியரசர் முடியரசன் படைப்புகள் -4

2
நெஞ்சு பொறுக்குதில்லையே

எங்கெங்குக் காணினும் தீமையடா- உல
      கெங்கணும் வாய்மைகள் ஊமையடா
அங்கங்கு வாழ்பவர் எள்ளினரே-குணம்
      அத்தனை யுங்கொண்டு தள்ளினரே
தங்கடன் செய்வதில் தூங்குகிறார்- மனச்
      சான்றுகள் கொய்யவே ஏங்குகிறார்
இங்கவர் நல்லவ ராவதெந்நாள்?-கெடும்
      எண்ணங்கள் யாவுமே போவதெந்நாள்?

பிஞ்சு மனத்தவ ராகினுமே- கலை
      பேணி முதிர்ந்தவ ராகினுமே
வஞ்சியர் ஆடவர் யாவருமே -படும்
      வாழ்வு மலர்ந்திடத் தீவினையே
அஞ்சில ராகியே கூட்டுகின்றார்-அந்தோ
      ஆசையில் நேர்மையை வாட்டுகின்றார்
நெஞ்சு பொறுப்பதற் கில்லையடா- இந்த
      நிலைகெட்ட மாந்தரால் தொல்லையடா

ஆறறி வுள்ளவர் மாந்தரடா- விலங்
      காகிட ஏன்மனம் சாய்ந்ததடா?
சோறது பெற்றிடத் தாழ்ந்தனரே-மனத்
      தூய்மையை விற்றிட வீழ்ந்தனரே