பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே95

அந்தவழி ஏகிடுவார் ஆடைகளைச்
      செந்துளியால் அழகு செய்வான்
இந்தஒரு மடையனுக்கு மந்தையிலே
      திரிவதலால் இங்கென் வேலை?

ஒதுங்குகிற இடமிருந்தும் உணர்வுடைய
      மனிதனவன் ஒதுங்க மாட்டான்
மதம்படுவான் கூச்சமிலா மாடுகள்போல்
      நடமாடும் வழியி லெல்லாம்
ஒதுங்குகிறான்; பகுத்தறியும் உணர்வில்லா
      உடலானுக் குடைய தற்கு?
வதங்கிடுமா இவன்மேனி? வழிவிலகிப்
      பழகியவன் மாறான் போலும்?