94 | கவியரசர் முடியரசன் படைப்புகள் -4 |
36 மனித மந்தை ஒருவழியிற் போவென்றால் வரும்வழியிற் புகுகின்றான்; ஓரஞ் சென்று தெருவழியில் நடவென்றால் தெளிவில்லான் நடுவழியிற் றிரிகின் றானே; ஒருவழியுந் தேறானாய் உயர்வழியும் அறியானாய் ஓடு கின்றான்; மருள்வழியே செல்கின்றான் வழிவிலகிப் போகின்றான் மதியுங் கெட்டான் ஊர்திகளில் ஏறிவிடின் உரிமையவன் பெற்றதுபோல் ஒதுங்க மாட்டான் யார்வரினும் இடமில்லை அப்பக்கஞ் செல்கவென அறிவுஞ் சொல்வான்; நேர்மையுளான் போற்பேசும்; நிற்பவர்க்கும் இடங்கொடுக்க நெகிழா துள்ளம்; போர்புரிவான் எவரேனும் புகுந்துவிடின்; பொதுநலமே போற்ற மாட்டான். உந்துகளில் ஏறுங்கால் ஒருபெரிய சமர்விளைப்பான் ஒழுங்கு போற்றான்; வந்தமர்ந்து வெற்றிலையை மடித்தெடுத்துக் குதப்புமவன் வழியில் துப்பி |