பக்கம் எண் :

நெஞ்சு பொறுக்கவில்லையே93

காணச்செல் திரையரங்கில் கன்னியர்தம்
      நடைமுறையுங் கைக லப்பும்
காணக்கண் கூசுமவர் வாய்மொழிகள்
      கேட்பதற்குக் காது கூசும்.

மகளிர்க்கு வீரமிலை எனவுரைத்தால்
      மடமாகும்; மாளி கைக்குள்
புகுதற்குள் அவர்புரியும் போர்முறைகள்
      பார்த்தபினர்ப் புகலல் செய்யார்;
வெகுளிக்கே இலக்காகி மேலாடை
      உடல்நழுவி விழுதல் காணார்
புகுவெற்றி கண்டதன்பின் போர்விடுப்பர்
      பூவைமறம் பொலிந்து வாழ்க.