50. செந்தமிழ்ச்செல்வி கேளார் தமிழ்மொழி கேடுறச் சூழ்ந்திடுங் கீழ்மதியை வாளால் அரிந்ததன் வேரைக் களைந்துநம் வண்டமிழைத் *தாளால் வளர்த்தனை; தண்புனல் வார்த்தனை; நின்குறிக்கோள் சூளாக் குறித்தனை; தொண்டுசெய் கின்றனை தூமொழியே செல்வியுன் தாளிற் சிலம்பும் பரலும் செவிகுளிர நல்கிடும் அவ்விசை நாள்முழு தும்பெற நாடுகின்றோம்; மெல்விரல் நீவி மிழற்றிய யாழொலி போலஇதழ் சொல்லிய பாடலிற் சொக்கிநின் றேஉனைச் சுற்றுதுமே. நடைஎழில் காட்டுவை, நல்லறி வூட்டுவை, நாண்மலரால் தொடைஎழில் காட்டுவை, தோகையுன் சாயலில் தோய்ந்துணரார்
*தாளால் - முயற்சியால் |