பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்105

52. பாடிக்கொண்டேயிருப்பேன்

பாடிக்கொண் டேயிருப்பேன் - என்
பைந்தமிழைச் செந்தமிழை நான்- பாடிக்

ஓடிக்கொண் டேயிருக்கும் ஊறுஞ்செங் குருதி
ஓடா துறைந்தே ஓய்ந்திடும் நாள்வரை - பாடிக்

கடும்பிணி கொடுஞ்சிறை கடுகி வந்தாலும்
      கலக்கிடும் வறுமைகள் காய்ந்திடும்போதும்
இடும்பைகள் வந்தெனை எற்றிடு மேனும்
      எதையும் அஞ்சிடேன் என்றுமே துஞ்சிடேன் - பாடிக்

பதவியும் பட்டமும் பணங்களுங் காட்டிப்
      பகட்டினும் எதற்கும் பணியேன் கைநீட்டி
முதுமொழி என்மொழி முத்தமிழ் மொழியை
      மொய்ம்புறக் காத்திட முனைந்திடும் வழியைப் - பாடிக்

(இக்கவிதையைப் படிக்கக் கேட்டவாறே கவியரசரின் உயிர் பிரிந்தது.)