| புதியதொரு விதிசெய்வோம் | 121 |
செங்கதிரால் தாமரைகள் சிரித்தி ருக்கும் சேர்மதியால் அல்லிமலர் வாய்சி ரிக்கும் பொங்கிவரும் மழைவரவால் பயிர்சி ரிக்கும்; பொய்யாத மொழிக்குறளால் புலம்சி ரிக்கும்; துங்கமுறச் சிரித்திருக்கும் அறிவால் ஆய்ந்து தூயனவன் சொல்வழியில் பொதுமை காண இங்கினிநாம் முயலுவமேல் புதுமை பூக்கும் புல்லடிமை தேய்ந்துசம நிலையே வாய்க்கும். |