| 192 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
அம்புவிமாந்தர்ஆழ்துயில்கொண்டனர்; மடமைகள்இன்னும்மறையவில்லை; கடவுளர்கதைகள்கலையவுமில்லை; சமயப்பூசல்சரியவுமில்லை; இமயம்குமரிஇடைப்படுநாட்டில் தொலைந்ததாகசாதி?தொலையவேஇல்லை தேர்தல்என்றொருசேதிவருமெனில் ஊர்வலமாகஉலாவரும்சாதி தமிழ்தான்எங்குந்தழைத்ததாஎன்றால் உமியளவேனும்உயரவேஇல்லை; வானொலிப்பெட்டிவாயைத்திறந்தால் வீணொலி,விளங்காவெற்றொலிமுழங்கும் சுப்பிரபாதம்சுருதிகள்ஸ்மிருதிகள் தப்பினால்இந்திதடபுடாஒலிகள், தியாகராசர்தெலுங்கிசைக்கீர்த்தனை இப்படிப்புரியாஇசையொலிகேட்கும்; எப்படிப்பொறுப்போம்?இதுதமிழ்நாடாம்! தமிழகக்கோவிலுள்தலையைநீட்டின் தமிழொலிஅங்கேதவழ்ந்திடக்காண்கிலம் இனமெனப்பாராதெதிரெதிர்நின்று முனிவுறும்ஞமலியின்முறைப்பொலிபோலக் கரகரஒலியேகாதில்விழும்; திருமணமுறையிலும்தெரியாமொழிதான்; எங்குநோக்கினும்எரிச்சலேமிஞ்சும்; பொங்கிஎழும்நாள்புரட்சிவரும்நாள் இங்கேதோன்றினால்எம்மவர்விழிப்பர்; பாடிஎழுப்பிற்பயனேஇல்லை; சாடிஎழுப்பின்சற்றேவிழிப்பர். பொங்குகபுரட்சிபொங்குகஎழுச்சி எங்கணும்இன்பம்தங்குகஇனிதே. பாவலர் மன்றம், ஈரோடு 12.1.1980 |