பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்21

அறப்போரைத் தொடங்குதற்குக் காஞ்சிச் செம்மல்
      அண்ணாதம் முரசொலியை முழக்கி விட்டார்
வரப்போகும் மொழிப்போரில் அணிவ குக்கும்
      வயப்புலிகள் கூட்டமொரு கடலை விஞ்சும்
இறப்போர்கள் சிந்துகின்ற குருதி வெள்ளம்
      எழுந்தெழுந்து தலைகளுடன் அலைகள் வீசும்
சிறப்போடு வருமிந்தி அதனுள் சிக்கிச்
      சீரிழந்து நாணிழந்து சிதறி ஓடும்.