பக்கம் எண் :

தாய்மொழிக் காப்போம்23

வீடென்ன மனையென்ன மக்க ளென்ன
      வீணுக்கு வாழ்வென்ன பதவி என்ன
நாடென்ன மொழியன்னை நலியும் போது?
      நாமென்ன மரமென்று நினைந்தார் போலும்?
*ஓடென்ன மெலிந்தென்ன? நரம்பி லெல்லாம்
      ஓடுவது புண்ணீரா? செந்நீர் வெள்ளம்;
ஈடென்ன கண்டதுண்டு தமிழ்மொ ழிக்கே?
      ஈந்திடுவோம் நம்முயிரை; வாகை கொள்வோம்.


* ஓடென்ன - ஓடுபோல