28 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
பிறப்போர்தாம் இறப்பதுவே இயற்கை என்ற பேருண்மை உணர்ந்தொருவன் எரியை யூட்டி வரப்போகும் இந்திக்கோர் செவ்வி ளக்காய் மறக்கோலங் கொண்டுடலம் வெந்து நின்றான் அறப்போரில் நிற்பவர்க்கோர் *சின்னம் ஆனான் ஆண்மையுளோர் வணங்குகிற *சாமி ஆனான்; மறக்காதீர் மறைக்காதீர்! இவனைப் போன்றோர் மாவீரர் பலருண்டு தமிழைக் காக்க! தாய்மொழியைக் காக்கஎனில் உயிர்கள் நல்கும் தாலமுத்து நடராசன் இன்னும் உண்டு; காய்மொழியீர்! உயிரீய வல்லார் எல்லாம் கனன்றெழுந்து நுமைநோக்கி விட்டால் நீங்கள் போய்மடிய எந்நேரம் ஆகும்? உங்கள் புல்லடிமை ஆட்சியெலாம் நின்றா வாழும்? பேய்மனத்தீர் பழிசுமக்க வேண்டா! நம்மைப் பெற்றவட்குப் பிழைசெய்தா வாழ்தல் வேண்டும் ?
*இந்தி எதிர்ப்பில் எரியூட்டிக் கொண்ட சின்னசாமி |