பக்கம் எண் :

44கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

19. வாளேந்தி வாமகனே

எடுப்பு

கொம்பூது கொம்பூது மறவா - வந்த
      கூடலர் ஓடிடச் சாடுவோம் என்றுநீ

- கொம்பூது

தொடுப்பு

தெம்பெங்கே படர்மார்பில் திறலெங்கே தடந்தோளில்
      திறம்பாடி மறம்பாடி நெஞ்சுக்குள் உரமேறக்

- கொம்பூது

முடிப்பு

தமிழாலே ஒன்றானார் தமிழ்மாந்தர் என்றாலே
      தலைதூக்க முடியாது தமிழ்நாட்டில் பகையாளர்
சுமையாக வாழாமல் சோற்றுக்கே சாகாமல்
      சூடேற்றித் தோளேற்றித் தமிழா நீ வாவென்று

- கொம்பூது

வந்தமொழி நாடாள வாய்த்த தமிழ் பீடேக
      வாழ்வதிலே யாதுபலன்? வாளேந்தி வாமகனே
எந்தமதம் எக்கட்சி என்றெதுவும் பாராமல்
      எமதுதமிழ் எமதுதமிழ் என்றோடி வாவென்று

- கொம்பூது

25.2.1987