46 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5 |
21. போருக்கு வா! யாருக்கு நீயஞ்சிச் சாகிறாய்? - மொழிப் போருக்கு வா! எங்குப் போகிறாய்? பாருக்குள் நீஇன்று மூத்தவன் - தமிழ் வேருக்கு நீபுனல் வார்த்தவன். வீட்டுக்குத் தூணென நின்றனை- களி யாட்டுக்கு வாழ்வினைத் தந்தனை நாட்டுக்கு யாரிங்குக் காவலோ? - வட நாட்டுக்கு நீயென்ன ஏவலோ? *ஓட்டுக்கு வந்தவன் ஆளவோ? - பட கோட்டிக்கு நாடின்னும் தாழவோ? ஆற்றுக்குள் காத்தனன் என்பதால்- தமிழ் நாட்டுக்குங் காவலன் என்பதோ? கோட்டைக்குள் ளேஒரு கும்பலோ?-ஒரு கோட்டுக்குள் ளேவிழும் வெம்பலோ? தேட்டைக்குள் வாழ்வரை நம்பவோ? -இனும் *கேட்டுக்குள் வீழ்ந்துளம் வெம்பவோ? நேற்றைக்கு நீயிங்கே ஆண்டவன் - அரி யேற்றையும் விஞ்சுரம் பூண்டவன் கூற்றுக்கு நேர்நிற்க அஞ்சிடாய்-தமிழ் நாற்றுக்கு நீர்விடக் கெஞ்சினாய்
*ஓட்டுக்கு - ஓடம் ஓட்டுவதற்கு, *கோட்டுக்குள் - கிளையில் |