பக்கம் எண் :

92கவியரசர் முடியரசன் படைப்புகள் - 5

மயற்படும் மாந்தர்தம் மதிதான் என்னே!
இந்நிலை நிலவிய இம்மா நிலத்தில்
அந்நாள் வெண்பொன் முந்நூ றளித்திட
இயற்றமிழ் மதிப்பை ஏற்றிய புலவன்,
செயற்றிறம் புரிந்து செந்தமிழ் வளர்த்தவன்,
கொள்கையிற் பிறழாக் குணக்குன் றவனைக்
கள்ளவிழ் மலர்கொடு கைகுவித் தேத்துவம்;
மறைமலை என்னும் மறையா மலையை
நிறைதர நெஞ்சினில் நிறுத்துவம் யாமே;
செறிபுகழ்ச் செந்தமிழ் செழித்திட அவன்றன்
நெறியறிந் தொழுகுவம் நிலைபெறும் பொருட்டே.

27.11.1976