104 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
34 வள்ளுவர் உலகில்... 7. பகைவர்கள் தன்மான உணர்வுக்குத் தீங்கு நேரின் தளராமல் இளைதாக முள்ம ரத்தை முன்மாளச் செய்திடவே முனைந்து நிற்பர்; முற்றியபின் களைந்தெறிய முயல்வ துண்டோ? பின்மாறும் கேள்போலப் பகைவ ரில்லை; பிழையாத வாள்போலும் பகைவ ருண்டு; மின்கோல வாழ்வுதனை நச்சி நின்று மேவாரைச் சார்ந்தொழுகும் கயவ ரில்லை. நேருக்கு நேர்நிற்கும் பகைவ ருண்டு நிழலுக்குள் பதுங்கிவரும் பகைவ ரில்லை; போருக்குள் விலகாத பகைவ ருண்டு புன்மைக்குள் வீழ்கின்ற பகைவ ரில்லை; மாருக்குள் வேல்தாங்கும் பகைவ ருண்டு மானத்தை விலைபேசும் பகைவ ரில்லை; வீறுக்கு வீறுசெயும் பகைவ ருண்டு விழலுக்கு நிகரான பகைவ ரில்லை. |