போர்முனையில் வாரிவிடும் குதிரை போலப் புகுந்திடர்கள் சூழுங்கால் ஓடி விட்டுச் சேர்பொருள்கள் மிகுபொழுதில் குழைந்து வந்து சிரித்துவிளை யாடிமகிழ் நண்ப ரில்லை; தார்புனையும் வில்வணக்கம் போல்வ ணங்கும் தந்திரஞ்சேர் சொல்வணக்கம் செய்வா ரில்லை; நேர்மொழிகள் பலபேசி வினைகள் வேறு நிகழ்த்துகிற நட்பினரும் அங்கே யில்லை. நகையேயும் பகைவேண்டார்; புலமை தோய்ந்த நயமிக்க சொல்லுழவர் பகைமை வேண்டார்; பகைமையையும் நட்பாக்கிப் பழகு கின்ற பண்புடையார்; நயவஞ்சம் சிறிது மில்லார்; மிகைசெய்து தம்மூரார் பகைமை கொள்ளார்; மேலோரைப் பழித்துரையார்; பிறன்பொ ருட்குத் தகுதியிலா ஆசை கொளார்; நாடு காக்கும் தன்மானப் பெருமையன்றிச் சிறுமை யில்லார். |