37 நமது கடமை பொய்யகத்தைப் பற்றாமல் தூய ஐந்து புலன்அழுக்குப் படராமல் மாசு நீக்கிக் கையகத்துக் கனியிருக்க அதைவி டுத்துக் காயதனைக் கவராமல் மெய்ம்மை கூறிச் செய்வினைக்குள் தீமைகளைப் புகவி டாமல் செம்மையுற ஒழுக்கநெறி விளக்கிக் காட்டி வையகத்துள் வாழ்வாங்கு மாந்தர் வாழ வழிவகுக்கும் திருமறையைத் தந்தான் வாழ்க. உலகவர லாறுரைக்கும் சுவடிக் குள்ளே ஓரேடு தமிழினத்தின் வரலா றாகச் சொலமறைநூல் தந்தானை, பண்பா டெல்லாம் தொகுத்தெடுத்து மொழிந்தானை, எங்கள் செந்நாப் புலவனெனும் பெயரானை, சிறிய பாட்டால் புதுமையுற உலகினையே அளந்து காட்டிக் குலவுபுகழ் கொண்டானை வணங்கி நின்று கொள்கைவழி நடப்பதுநம் கடமை யாகும். |