138 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
11 ஆதவன் நினைஆதவன் என்று நினையாதவன் - ஒன்றும் புரியாதவன் கண்கள் திறவாதவன் - ஐயா - நினை மண்மேவும் அறியாமை இருள்யாவும் தொலைக்கும் மதிமேவும் ஒளிபாயும் செயல்யாவும் விளைக்கும் - நினை ஆண்டவர் யார்உரிமை பூண்டவர் யாரென அறியாமல் நினையாமல் அசையா திருந்தோம் மூண்டெழும் போர்மறவன் போலெழுந் தார்ர்த்தனை முன்னவர் யாமெனும் உரிமையைச் சேர்த்தனை - நினை கண்மூடி வழக்கங்கள் கடவுளர் விளக்கங்கள் கதைகூறும் மயக்கங்கள் கயமையின் குழப்பங்கள் மண்மூடிப் போகட்டும் மடமைகள் சாகட்டும் மதிமேவி வாழட்டும் எனக்கூறி மார்தட்டும் - நினை 20.6.1979 |