பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்139

12
வெண்தாடி வேந்தர்

வெண்தாடி வேந்தரைப் பாரீர் - செய்த
விந்தைகள் யாவையும் பாடுவம் வாரீர்

- வெண்தாடி

கண்மூடிப் பழக்கங்கள் மண்மூடிப் போகக்
காலமெல் லாம்உழைத்து மேனியெல்லாம் பழுத்த

- வெண்தாடி

பண்ணுயர் தமிழும் பாங்குயர் இனமும்
பாரினில் மேம்படப் போர்பல தொடுத்தார்
கண்ணொளி குறைந்தும் கால்நடை தளர்ந்தும்
கலங்காமல் தன்னலங் கருதாமல் உழைத்தார்

- வெண்தாடி

செந்தழல் மேனி சிந்தனை ஞானி
சிங்கம்போல் முழக்கம் சீரிய பழக்கம்
வெந்துயர் தாக்கினும் வீணர்கள் தூற்றினும்
வெஞ்சிறை யேகினும் அஞ்சில ராகிய

- வெண்தாடி

சிக்கனக் காரர் செலவிட ஒவ்வார்
சேர்த்தவை எல்லாம் யார்க்கெனத் தந்தார்?
மக்களுக்கு கென்றே மனத்தினிற் கொண்டார்
தொகுத்தார் வகுத்தார் கொடுத்தார் அந்த

- வெண்தாடி<