பக்கம் எண் :

140கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

பகலிலும் இரவிலும் பயணம் செய்வார்
பனிமழை பாரார் பசியெனச் சோரார்
இகலது சாய இழிவுகள் மாய
எதிர்ப்பார் அறப்போர் தொடுப்பார் அந்த

- வெண்தாடி

ஆதர வின்றி அண்டிய பிள்ளை
அத்தனைப் பேருக்கும் அவர்தாம் தந்தை
ஓதிய கொள்கை மோதுதல் அன்றி
ஒருதனி மனிதரைப் பகைத்ததும் இல்லை

- வெண்தாடி

தண்டின் துணையால் தளர்நடை நடந்தும்
தரைதனில் நடந்திட இயலா திருந்தும்
தொண்டின் பணியில் துவளா திருந்தார்
தொழுவோம் அவர்பணி தொடர்வோம் எங்கள்

- வெண்தாடி

21.6.1979