40 தொடர்ந்து செல்வேன் தனக்கென்று வழியமைத்துக் கொள்ள வில்லை தமிழினத்தின் வாழ்வுக்கே வழிய மைத்தான்; எனக்கென்றவ் வழியொன்றே தேர்ந்து கொண்டேன்; இன்றுவரை பிறழாமல் ஒழுகு கின்றேன்; குணக்குன்றை ஒருநாளும் பழித்த தில்லை; குறுக்குவழி சென்றதிலை; குழப்பம் செய்யப் பிணக்கொன்றும் விளைக்கவிலை; அதனால் துன்பம் பெற்றதுண்டு; வாழ்க்கைவளம் பெற்ற தில்லை. வளமற்ற நிலைகண்டோர் பரிந்து பேசி வாழவழி பலவுண்டு வருக என்றார்; உளமற்ற நிலைஎனக்கு வந்த தில்லை; உறுதியுளேன் ஒருபொழுதும் வழுவ மாட்டேன்; தளர்வுற்ற எனக்கென்ன கிடைக்கு மென்று தரங்கெட்டுப் பிறர்வழியில் சென்ற தில்லை; வளமற்று வாழ்ந்தாலும் அண்ணன் சொன்ன வழிபெற்று வாழ்கின்றேன் தொடர்ந்து செல்வேன். 17.9.1978 |