208 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
பேசா திருந்தவன் தான் பேதைத் தனமென்றே ஏசா திருந்தவன்தான் என்றாலும் எல்லையின்றிப் போதலால் என்றன் பொறுமை தனையிழந்தேன் ஆதலால் பாட்டுக்குள் ஆவேசங் காட்டிவிட்டேன் சூடு மிகையாகத் தோன்றுமோ என்பதனால் சாடும் முறையதனைச் சற்றே நிறுத்துகின்றேன்; அண்ணாவைப் போற்றுவோம் அண்ணன் வழிநிற்போம் கண்ணேபோல் எண்ணிக் கழகத்தைக் காத்திடுவோம் அய்யாவும் இன்றில்லை அண்ணாவும் இன்றில்லை மெய்யாக நம்மினத்தை மேலோங்கச் செய்பவரார்? என்றுநாம் ஏங்குகையில் ஈதோ இருக்கின்றேன் என்று குரல்கொடுத்தார் ஈரோட்டார் பேரரிவர்; ஈடில்லா அண்ணன் இதயத்தைப் பெற்றுள்ள பீடுள்ளார் நம்வீட்டுப் பிள்ளை என ஆனார்; ஈரோட்டுப் பள்ளியிலே ஏடெடுத்துக் கற்றுணர்ந்து பாராட்டுங் காஞ்சிபுரப் பல்கலைசேர் மன்றத்தில் கற்றுத் தெளிந்து கலைஞர் எனும்பட்டம் பெற்றுத் திகழும் பெருமை மிகவுடையார்; காற்றடித்த போதுங் கழகம் எனும்விளக்கை ஏற்றி அணையாமல் எந்நாளும் காக்கின்றார்; இன்றைக் கவர்பெருமை ஏற்றிளங் காளையர்க்கு நன்று தெரியாது நாளை புலனாகும். நாட்டை வளமாக்க நம்மினத்தை முன்னேற்றப் பாட்டை அமைக்கின்றார் பங்காளி ஆகிடுவோம்; வீறுநடை போடுங்கள் வெற்றிமலர் சூடுங்கள்! கூறுகிறேன் என்கை குவித்து. .........9.1975 |