பக்கம் எண் :

வள்ளுவர் கோட்டம்27

7
திருக்குறள் நம் மறை

நமக்கென ஒருமறை யுண்டு - அதை
நம்பி நடந்திடு நன்னெறி கண்டு
       - நமக்கென
அமைப்பால் உயர்ந்திடும் அருட்பால் மருந்து
விருப்பால் அருந்தி இருப்பாய் திருந்தி
       - நமக்கென
உடலில் படிந்திடும் அழுக்கினைத் துடைத்தனை
உளத்தில் மாசுகள் அடைந்திட விடுத்தனை!
மடமை அகன்றிட மாந்தனென்று றுயர்ந்திட
வாழ்வினைத் துலக்கிடத் தாழ்வினை விலக்கிட
       - நமக்கென
எதையெதை யோமறை என்றுநீ போற்றினை
என்பயன் கண்டனை இழிநிலை கொண்டனை!
கதைகளை நம்பினால் காண்பயன் ஒன்றிலை
கருத்தினை வளர்த்திடும் திருக்குறள் படித்திடு
       - நமக்கென
ஆயிரம் திருவிளை யாடல்கள் பாடினை
அம்மஓ! நீயும் ஆடல்கள் ஆடினை!
காயினைக் கவர்ந்தனை கனியினை மறந்தனை
கருத்தினில் ஒருகுறள் நிறுத்திடின் உயர்ந்தனை
       - நமக்கென

2.7.1987