82 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6 |
இன்றொன்று நாளையொன் றேற்ற வகைதெரிந் தொன்றொன்றாச் சொல்லி உயர்த்திவரும் அப்பள்ளி; தானென்ற தற்செருக்கைத் தள்ளித் தனக்காகத் தானென்ற பேராசை தன்னைத் தகர்த்தெறிந் தெல்லாரும் ஒன்றென்றே எண்ணுகிற ஒப்புரவைச் சொல்லாமற் சொல்லிச் சுடரேற்றும் நற்பள்ளி; பள்ளியெனும் இல்வாழ்வில் பங்குடையோர் இவ்வனைத்தும் உள்ளமுறக் கற்பதைத்தான் ஓதிவைத்தார் கற்பென்று; பாரில் அதைமாற்றிப் பாவையர்க்கு மட்டுமென்று கூறிப் பிரித்துரைத்தார் கொண்டவனுந் தப்பிவிட்டான், வீடில்லை பொன்னில்லை வேண்டும் பொருளில்லை தோடில்லை மற்றுந் துணியில்லை என்றாலும் நீங்காத பேரன்பு நெஞ்சில் நிறைந்திருந்தால் தாங்காத பேரின்பந் தானேவந் தெய்திவிடும்; *ஒன்றன்கூ றாடை உடுப்பவரே யானாலும் ஒன்றினார் வாழ்க்கையே வாழ்க்கை எனவுரைத்த மூத்தோர் மொழிப்பொருளை முன்னிறுத்தி நாம்வாழின் பூத்துக் குலுங்கும் பொலிவு. இலக்கியப் பேரவை ஈரோடு 23.12.1967
* “ஒன்றன் கூறாடை ... வாழ்க்கை” - கலித்தொகை |