பக்கம் எண் :

98கவியரசர் முடியரசன் படைப்புகள் - 6

அகப்பொருளைப் புறப்பொருளாச் செய்ய மாட்டார்
       அதன்செவ்வி நன்குணர்ந்த அந்த வீட்டார்;
தகப்பனென அன்னைஎனப் பெயர்கள் கொண்டு
       சரிநிகராய் ஒருமனமாய் வாழ்தல் கண்டேன்;
மகப்பெறுதல் ஒன்றுமட்டும் குறியாக் கொள்ளார்
       மாண்புடைய இல்வாழ்வுப் பயனே கொள்வார்.

பெற்றுவிட்டோம் பிள்ளைகளை, யாது செய்வோம்?
       பேணுதற்கும் வகையற்றோம் என்று நெஞ்சில்
உற்றதுயர் தாங்காமல் புலம்ப வில்லை
       ஓரிரண்டு பிள்ளைகளைப் பெற்ற தாலே;
வெற்றுடலின் கவர்ச்சிகளில் மயங்க வில்லை
       விளைந்துவரும் உளப்பண்பை நயந்து வாழ்ந்தார்;
கற்றவரை உருவாக்க வேண்டு மென்ற
       கடமையினால் நாட்டுக்கும் நன்மை செய்தார்.