பக்கம் எண் :

270கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7

கொய்யுளையாற் பொலிபுரவி முகத்தான் மோதிக்
      கொட்புற்றுக் கொட்புற்றுப் புறங்கால் கொண்டு
மெய்யுளைய உதைத்துதைத்துத் துள்ளித் துள்ளி
      மேவலர்தம் பிணிப்பகற்ற இயலா தங்குச்
செய்வழியும் அறியாமற் களைத்த லுத்துத்
      திகைப்புறுங்கால் அவ்வீரர் இறுகக் கட்டி
மெய்ந்நலிய வயந்தநகர்க் கீர்த்துச் சென்றார்;
      மேலவனைப் பிரியாமா பிரிந்த தந்தோ! 22


வலித்தார் - இழுத்தார், கொய்உளை - வெட்டிவிடப்பட்ட பிடரிமயிர்
கொட்புற்று - சுழன்று.