274 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 9 புரவியை வேண்டிப் புகுந்திடும் வேழன் விரவிய அவன்பால் வெகுண்டுரை கூறினன் சினமடங்கல் அனையவன்மா வேழன் கொண்ட சினமடங்க வில்லை; அவன் உருத்து நோக்கி, ‘மனமகிழ்ந்து வரவுரைக்கும் மன்னா! நின்றன் மதிக்குடைக்கீழ் வாழ்ந்திருப்போர் கள்வர் தாமோ? புனநிழலில் நானயர்ந்து துயிலும் போழ்து புகுந்துசிலர் என்புரவி கவர்ந்து வந்தார்; எனதுயிரின் அனையபரி மீட்டுச் செல்ல இவண்வந்தேன்; விரைந்ததனைக்கொணர் தல்வேண்டும்.29 விரைந்ததனைக் கொணர்ந்திலையேல் மன்னா நீதான் வீண்பழிக்கே ஆட்படுவை; என்றன் நெஞ்சில் நிறைந்தெழுமென் சினத்தீக்கு முன்னர் நிற்கும் நிலைமையினை எய்திடுவை’ எனக்க னன்றான்; கரைந்தசின மொழிகேட்ட வயந்தர் வேந்தன்; கசந்துமன முளைந்தாலும் மறைத்து நின்றான் உறைந்தபகை குறைந்திருநாட் டரசும் அப்போழ் தொருமையுடன் வாழ்வதனால் பொறுமை கொண்டான்.30
மடங்கல் - சிங்கம், உருத்து - சினந்து, புனம் - காடு, இவண் - இங்கே, உளைந்தாலும் - வருந்தினாலும், |