உறவெழுந்து கண்துடைத்து நிமிர்ந்தான்; ஆங்கண் ஓவியத்துப் பாவையென ஒருத்தி நின்றாள்; திறமிகுந்த உளம்நடுங்க உடல்வி யர்க்கத் திகைத்திருந்தான் பகைப்புலத்தும் திகைப்பே யில்லான் 39 இவளனைய எழில்மகளை உலகில் யாண்டும் இதன்முன்னர் அவ்வீரன் கண்ட தில்லை; குவளைவிழி கொவ்வையிதழ் பவழ மேனி கொண்டவளை அழகுருவை இன்று கண்டான்; தவளநிறத் துகிலுடுத்த தையல் நோக்கித் தலைகுனிந்தாள் கடைக்கணித்தாள் இதழின் ஓரம் தவழுமெழிற் புன்னகையைக் காட்டி நின்றாள்; தனையிழந்தான் கனவிதுவோ எனநி னைந்தான்.40
அரவம் - ஒலி, தவளம் - வெண்மை. |