பக்கம் எண் :

வீரகாவியம்369

வயத்தரசன் அவையகத்தே உளஓர் வீரன்
      வளங்கெழுமும் மூவகத்தை வெல்வான் வேண்டி
நயத்தெழுதல் ஊர்முழுதும் பரவக் கேட்டு
      நல்லஇளங் காளையர்கள் படையிற் சேர்ந்தார்;
வியத்தகுநற் செயலுக்கு மகிழ்ந்த மன்னன்
      விறன்மிகுதன் கவசத்தைத் தலைவற் கீந்து
பயக்கட்டும் பெருவெற்றி என்று வாழ்த்திப்
      பலமறவர் படைகளுடன் அனுப்பி வைத்தான்.271

மகப்பெறுபடலம் முற்றும்.


நயத்தெழுதல் - விரும்பியெழுதல். தலைவள் - படைத்தலைவனாகிய கோளரி.