368 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 57 பரியினைப் பெற்றஅச் சிறியவன் விரைந்து பொருபடை திரட்டிப் போர்செய முனைந்தனன். ஆடிக்குள் காண்பார்தம் தோற்ற மெல்லாம் அவ்வாறே தோன்றுதல்போல் தந்தை சாயல், நீடிக்கும் பெருவீரம், செய்கை, பண்பு நினைவெல்லாம் அப்படியே ஒக்கின் றானால்; தேடிக்கண் டின்புறவே தந்தை யின்பால் செலநினைந்தான்; இவனைஇனித் தடுப்ப தென்றால் மூடிக்குள் பெரும்புயலை அடக்கல் போலாம்; முயல்கஅவன் வெல்கவென மகிழ்ந்து நின்றாள்.268 பணியாளன் ஒருவனைக்கூய்த் தேர்ந்தெ டுத்த பரிபலவுங் கொணர்கவென ஆணை யிட்டாள்; அணியாக வந்தவற்றுள் ஒன்றும் இந்த அடலேற்றுக் கொப்பவிலை; மற்றோர் வீரன் மணியான பாய்மாவொன் றங்குத் தந்து ‘மாவேழன் புரவிக்குப் பிறந்த தாகும்; இணையாக இதற்கொன்றும் இல்லை’ என்றான்; ஏறனையான் மகிழ்ந்ததன்மேல் ஏறிக் கொண்டான்.269 ‘என்னையினிப் பொருதுவெல யாரும் இல்லை; எவருக்கும் அஞ்சுதலும் இனிமேல் இல்லை; முன்னிவரும் புரவியிதன் மிசையி ருந்தே மூவகத்தை வென்றிடுவேன்; மதலைக் கோவும் தன்னுரிமை அரசிழப்பன்; எனது நெஞ்சின் தணப்பரிய கனவுகளும் நனவாய்த் தோன்றும் அன்னையுனை வணங்குகின்றேன்’ எனமொ ழிந்தே அடல்மிகுந்த படையொன்று திரட்டிச் சென்றான்.270
ஆடி - கண்ணாடி. கூய் - அழைத்து. அடலேறு - வெற்றிக்காளை போன்ற கோளரி. தணப்பரிய - நீங்காத. |