374 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
இயல் - 59 கனகனின் ஓலையைக் கண்ட கோளரி மனமகிழ் வுறவே மலர்த்திப் படித்தனன். ‘நாட்டின்பால் பற்றுடைய இளைஞர் ஏறே! நாவலத்தின் மானத்தைக் காப்ப தற்கு வேட்டெழுந்த உன்திறத்தை நாடு போற்றும்; வெற்றியுடன் மீள்கஎன வாழ்த்து கின்றேன்; கோட்டைஎழும் வெண்ணகரம், மூவகத்தின் கோட்டருகில் வடதிசையில் விளங்கல் காண்பாய்! கூட்டமொடு சூழ்ந்ததனை முதலில் தாக்கிக் கோட்டையினை நின்வயமே ஆக்கிக் கொள்க!280 பின்னருனக் கெளிதாகும்; மூவ கத்தின் பிடியுனது கையகத்தே வந்து சேரும்; நன்னரது வந்துவிடின் உலகில் எங்கும் நலம்விளையும்; நலிவுதரும் போரே யில்லை; பன்னரிய இதுநினைந்தே மறவர் சூழப் படைத்தலைவர் இருவரையும் அனுப்பி யுள்ளேன்; நின்னுடைய சொற்கேட்டுத் துணையாய் நிற்பர்; நிகரில்லாப் போர்த்திறத்தர்’எனுஞ் சொற் கண்டான்281
கோட்டருகில் - எல்லைப்பக்கத்தில் |