பக்கம் எண் :

வீரகாவியம்373

மாமன்னன் எண்ணத்துக் குடந்தை யாக
      மாவலியும் தடவலியும் இசைந்தா ராகி,
ஆமென்ன உறுதிமொழி தந்து நின்றார்;
      அரசனொரு முடங்கல்வரைந் தவர்பால் தந்து,
போமென்ன, அப்பணியைத் தலைமேற் கொண்டு
      போர்த்தலைவர் முறுவலன்பால் புக்கு நின்று
கோமன்னன் தந்ததிரு வோலை தந்தார்;
      கோளரியும் விரித்ததனை நோக்க லுற்றான்.279