372 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 7 |
‘படைத்தலைமை கொண்டுள்ளீர்! வயந்தர் தந்த படைக்குரிய கோளரிதான் யாவன் என்று படைத்துணர வல்லீரோ? நமது நாட்டின் பகைவன்மா வேழனுக்கும் வயந்தன் பெற்ற இடைக்கொடியள் வேல்விழிக்கும் பிறந்த செல்வன்; இதுபிறர்க்கு மறைபொருளா வுள்ள தென்று கிடைத்துளது செய்தியொன்று; போரில் வேழக் கிழவனுக்கு நிகராவான் என்றும் சொல்வர்.275 நமதுபெரும் படைத்துணையும் இன்று பெற்றான் நானிலத்தில் எவர்பொரினும் எளிதில் வெல்வான்; எமனனைய மாவேழன் வாழ்வால் தோல்வி ஏலாத மூவகத்தைத் தோற்கச் செய்வான்; சமர்புரியும் மதலைக்கு வேழன் போலத் தனிமதலை இவன்நமக்கு வாய்த்தான்; நல்ல சமயமிது; இவ்வமரில் நமக்கே வெற்றி சார்ந்துவிடும் ஐயமிலை திண்ணம் திண்ணம்.276 தந்தையையும் மகனறியான்; தந்தை யும்தன் தனயனைக்கண் டறிந்ததிலை; அதனாற் போரில் உந்திஎழும் உணர்ச்சியினால் நேரில் மோத உடன்றெழுவர்; கிழமகனை வலித்துத் தாக்கி நொந்துவிழ அவன்மகனே செய்து நிற்பான்; நொடிப்பொழுதில் ஆர்ப்பரித்துக்கொன்றுந் தீர்ப்பான்; எந்தஒரு துயருமிலை மூவ கத்தை எளிதாகப் பணிவிப்போம் ஆட்சி கொள்வோம்.277 பின்னர்மகன் உண்மையுணர்ந் தெதிர்க்கு மாயின் பெரிதில்லை நமக்கவனை அழித்தொ ழித்தல்; முன்னமிவர் ஒருவரைமற் றொருவர் தம்முள் முறைமையினை அறிந்துகொளா திருப்பி னன்றோ சொன்னவெலாம் நிறைவேறும்! புரிந்து கொள்ளின் தோன்றமரில் சமர்செய்ய வாரார்; நீவிர் சின்னஒரு துளியேனும் அறியா வண்ணம் சின்னவனைச் சூழ்ந்திருத்தல் வேண்டும்’ என்றான்.278
பொரினும் - போர்செய்தாலும். மதலைக்கு - மதலைக் கோமானுக்கு. |