114 | கவியரசர் முடியரசன் படைப்புகள் - 8 |
‘தோயுமுளக் கதிர்மணியும் கா.சு. பிள்ளை1 எனச்சொல்லுந் தூயவரும் கலைக ளெல்லாம் ஆயுமுயர் கழகத்தின் இரண்டு கண்கள்; யாம்பயிலும் அந்நாளில் அந்த மேலோர் ஞாயிறெனத் திங்களெனத் திகழ்ந்து நிற்பர்; நல்வர்பாற் பயிலஎழும் ஆர்வம் உந்தப் பாயுமலைக் கடல்கடந்து சென்றோம்; அங்குப் பலகற்றோம் எம்வாழ்வின் பயனும் பெற்றோம்’ 16 ‘அகப் பொருளோ புறப்பொருளோ நீதி நூலோ எதுவெனினும் அளவில்சுவை சொட்டச் சொட்டப் புகட்டிடுவார் அச்சுவையிற் சொக்கி நிற்போம்; பொழுதகலல் தெரியாது பாடஞ் சொன்னால், அகத்துறுவோர்2 விரும்பியநூல் உரைப்ப தற்கும் அகஞ்சலியார் அவருளமும் புலமுங் கண்டு திகைப்புறுவோம்களிப்புறுவோம்;’ இவையனைத்தும் தென்னிலங்கை இலக்குமண ஐயர் சொற்கள் 17 கலைமலிந்த கதிரேசர் செறிந்த கல்விச் கடலாக அந்நகரில் விளங்குங் காலை, 3புலம் விழைந்து வந்ததனுட் படிந்து மூழ்கிப் புனலுண்டு திசையெங்கும் படர்ந்து சென்று நிலங்குளிர்ந்து செழுமையுற மழைபொ ழிந்து நிலவிவரும் மாமுகில்கள் பலவாம்; மேலும் நலம்மிகுந்த தமிழ்மொழியாம் பயிர்வ ளர்ந்து நாட்டகத்து விளைபயனும் பலவாம் இங்கே. 18 மலர்விரிந்து கனிமிகுந்து நிழலும் நல்கி மணம்பரப்பும் பூம்பொழிலே மணியார்; அங்கே அலர்குடைந்து1 மட்டுண்ட சுரும்பி னங்கள் அங்கங்கே யாழிசையை வழங்கி நிற்கும்;
1.பேராசிரியர் கா.சுப்பிரமணியபிள்ளை 2 வீடுதேடிவருவோர் 3அறிவு, 1 தேன், |